மதுரை தனியார் பால்பண்ணை மீது தாக்குதல்

மதுரை பாலமேட்டில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் தனியார் பால் பண்ணை அடித்து நொறுக்கப்பட்டது.
மதுரை தனியார் பால்பண்ணை மீது தாக்குதல்
x
மதுரை பாலமேட்டில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் தனியார் பால் பண்ணை அடித்து நொறுக்கப்பட்டது.  பால்பண்ணை அலுவலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் மேஜை நாற்காலிகள் அடித்து நொறுக்கினர்.மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 6 வாகனங்களை சேதப்படுத்திய அவர்கள், பணியில் இருந்த  பெண் ஊழியரையும் தாக்கினர். படுகாயம் அடைந்த அவர் மதுரை பாலமேடு அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரி ஒரு பிரிவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்