"தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்" - வானிலை ஆய்வு மையம்
தென் மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில், கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் நாளை 7ஆம் தேதி, குமரிக்கடல், மத்திய இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.
Next Story