வெடிக்கு பதில் செடி வைத்து தீபாவளி கொண்டாட்டம்
சென்னை திருவொற்றியூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் வெடிக்கு பதில் செடி வைத்து தீபாவளியை கொண்டாடினர்.
மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சிதம்பர முருகேசன் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பங்கேற்று அசோகா, வில்வம், அரசு, வாழை உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டனர். பள்ளிகளில் மரம் வளர்ப்பதன் மூலம் மாணவர்களுக்கு புத்துணர்வு கிடைக்கும் என்று ஆசிரியர்களும் தொண்டு நிர்வாகத்தினரும் தெரிவித்தனர்.
Next Story