சட்டவிரோத மது விற்பனை - 17 பேர் கைது

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார கிராமங்களில் தீபாவளியை ஒட்டி சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மது விற்பனை - 17 பேர் கைது
x
தீபாவளியை ஒட்டி மது விற்பனை அதிகரித்துள்ளதால் சிலர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் இரும்பாலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில், சட்டவிரோதமாக வெளிமாநில மதுபானங்களை விற்பனை செய்த 17 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கலப்பட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்