பட்டாசு வெடிப்பதில் ஆர்வமற்ற மக்கள் - களையிழந்த தீபாவளி

மதுரையில் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
பட்டாசு வெடிப்பதில் ஆர்வமற்ற மக்கள் - களையிழந்த தீபாவளி
x
மதுரை மாநகர் பகுதிகளான முனிச்சாலை, செல்லூர், கீழவாசல், தெற்குவாசல், எல்லீஸ்நகரில் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நேரத்திலும் கூட பொதுமக்கள் வெடிகள் வெடிக்கவில்லை. இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், நீதிமன்றத்தின் உத்தரவாலும் காவல்துறையின் கெடுபிடியாலும் இம்முறை வழக்கம் போல் தீபாவளியை பட்டாசுடன் கொண்டாட முடியவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்