தற்காலிக பட்டாசு கடையில் தீ விபத்து

தீபாவளிக்காக திருச்சியில் செயல்பட்டு வந்த பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
தற்காலிக பட்டாசு கடையில் தீ விபத்து
x
திருச்சி உறையூர் வாலாஜா சாலையில் குமார் என்பவருக்கு சொந்தமான கடை உள்ளது. தீபாவளி பண்டிகைக்காக இந்த கடையில் தற்காலிக பட்டாசு பிரிவு அமைத்து பட்டாசுகள் விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை வியாபாரத்தை முடித்து விட்டு கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி கொண்டிருந்த நேரத்தில் கடையில் திடீரென ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக கடையில் இருந்த அனைவரும் வெளியே ஓடி வந்துள்ளனர். தீ சிறிது நேரத்தில் கடை முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்ததில் கடையில் இருந்த பட்டாசுகள் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைப், சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட பொருட்கள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன. கடையின் மேல் தளத்திற்கும் தீ பரவியதில் குடோனில் இருந்த பொருட்களும் எரிந்து சேதமடைந்தன. விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்