தமிழகம் முழுவதும் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி பண்டிகை வழக்கமாக உற்சாகத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்
x
தீபாவளி நாளான இன்று, அதிகாலையில் எழுந்த பொதுமக்கள் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்தனர். அத்துடன், பெரும்பாலான மக்கள் கோயில்களுக்கு சென்று விளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். சிறுவர்கள் தங்களது வீட்டு வாசலில், நண்பர்கள் பட்டாளத்துடன் பட்டாசுகளை வெடித்து தங்களது அளவில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். புதுமண தம்பதிகள் தங்களது குடும்பத்தினருடன் தலை தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். முக்கிய சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்