வெளிமாநிலங்களுக்கு கடத்தவிருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் வெளி மாநிலங்களுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
வெளிமாநிலங்களுக்கு கடத்தவிருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
வாணியம்பாடி கச்சேரி சாலையில் காவல்துறையினர் நடத்திய வாகன தணிக்கையின் போது 1 டன் அரிசி மூட்டைகள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து அரிசியை கடத்தி வந்த 3 பேரை குடிமை பொருள் கடத்தல் பிரிவு அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதேபோல வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், வாணியம்பாடி ரயில் நிலையத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஆந்திர மாநிலத்திற்கு கடத்த வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்