காவல் நிலையத்தில் ரகளை - கருணாஸ் உள்பட 3 பேர் கைது

போலீசார் தாக்கியதாக கருணாஸ் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு
காவல் நிலையத்தில் ரகளை - கருணாஸ் உள்பட 3 பேர் கைது
x
நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல்நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டதாக எம்.எல்.ஏ. கருணாஸின் கார் ஓட்டுனர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கருணாஸ் கைதான போது, அரசு பேருந்தை உடைத்தாக கைது செய்யப்பட்டிருந்த கருணாஸின் கார் ஓட்டுனர் கார்த்திக் அவரது நண்பர்கள் சுப்பையா, சாமித்துரை ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த அவர்களை மீண்டும் போலீசார் விசாரணைக்கு அழைத்த‌தால் போலீசாருடன் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போலீசார் தங்களை தாக்கியதாக குற்றம்சாட்டி ஓட்டுனர் கார்த்திக் உள்பட மூன்றுபேரும் உடலில் மண்ணென்னெய் ஊற்றிகொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்