செம்மரம் வெட்டிக்கடத்திய சேலத்தை சேர்ந்த 2 பேர் கைது

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் செம்மரம் வெட்டி கடத்திக் கொண்டு வந்த சேலத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்ததுடன் 62 செம்மரங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
செம்மரம் வெட்டிக்கடத்திய சேலத்தை சேர்ந்த 2 பேர் கைது
x

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட நாகேஸ்வர கொண்ட அருகே செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினர் இன்று காலை வனத்துறையினர் உடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செம்மரங்களை தோளில் சுமந்தபடி 70-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். அவர்களை போலீசார் மற்றும் வனத்துறையினர் பிடிக்க முயன்ற போது கடத்தல் காரர்கள் செம்மரங்களை ஆங்காங்கே வீசி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் சேலம் மாவட்டம் வாழப்பாடி சேர்ந்த பழனி, சின்னதுரை ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பியோடியவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கைதானவர்களிடம் இருந்து ஒரு கோடி மதிப்புள்ள 62 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்