குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் பெண் மரணம் : செவிலியர்கள் அலட்சியம் என உறவினர்கள் குற்றச்சாட்டு

சேலத்தில் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் பெண் மரணம் : செவிலியர்கள் அலட்சியம் என உறவினர்கள் குற்றச்சாட்டு
x
சேலத்தில் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாது என்பவரின் மனைவி அம்சவல்லி, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு, நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து, அதிக ரத்தபோக்கு காரணமாக உடல் நிலை மோசமடைந்தது. இன்று காலை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அம்சவல்லி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்​. இதையறிந்த உறவினர்கள் ஆத்தூர் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொயடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்