டயர் கடையில் திருட முயன்ற கொள்ளையன் - கொள்ளையனின் உருவம் சிசிடிவி கேமராவில் பதிவு
கரூர் திருக்காம்புலியூர் பகுதியில் உள்ள டயர் கடையில் ஒரு கொள்ளையன் நள்ளிரவில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளான்
கரூர் திருக்காம்புலியூர் பகுதியில் உள்ள டயர் கடையில் ஒரு கொள்ளையன் நள்ளிரவில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளான். ஆனால் முயற்சி பலிக்காததால் அந்த கொள்ளையன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளான். காலையில் கடை உரிமையாளர் வடிவேலு சிசிடிவி கேமராவை பார்த்த போது அதில் ஒரு மர்ம நபர் கடையின் பூட்டை உடைக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து கடை உரிமையாளர் வடிவேலு கரூர் நகர போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story