பஜனை மடத்தில் 7 வெண்கல சிலைகள் திருட்டு

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள பஜனை மடத்தில் 7 வெண்கலச் சிலைகள் திருட்டுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஜனை மடத்தில் 7 வெண்கல சிலைகள் திருட்டு
x
காரைப்பட்டி என்ற இடத்தில் உள்ள பஜனை மடம் ஒன்றில் நேற்றிரவு பஜனை முடிந்ததும் நிர்வாகிகள் மடத்தை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், இன்று பஜனை மடத்தின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மடத்தின் நிர்வாகிகள் உள்ளே சென்று பார்த்த போது 7 வெண்கல சிலைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அளித்த தகவலின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்