18 ஐ. பி. எஸ் அதிகாரிகள் இடமாற்றம்...
தமிழகத்தில், 18 ஐ. பி. எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். திருவாரூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
* சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர்கணேசமூர்த்தி - டிஜிபி அலுவலக ஜஜி - ஆக பணியாற்றுவார். கட்டாய ஓய்வில் இருந்த பாலகிருஷ்ணன் - சென்னை குற்றப்பிரிவு இணை ஆணையர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.
* கட்டாய ஓய்வில் இருந்த மற்றொரு " எஸ். பி "விஜயகுமார் - பொருளாதார குற்றப்பிரிவுக்கு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். டிஜிபி அலுவலக நிர்வாக டி.ஐ ஜியாக பணியாற்றி வந்த செந்தில் குமாரி - சென்னை ரெயில்வே துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
* சென்னை மேற்கு போக்குவரத்து துணை ஆணையர் துரை - திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த விக்ரமன் - கணினி துறை எஸ். பி ஆக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
* கோவை சட்டம் - ஒழுங்கு துணை ஆணையர் லட்சுமி - மேற்கு சரக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை தலைமையக லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த
* கே. சண்முகம் - பதவி உயர்வு பெற்று, தெற்கு சரக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி ஆக பணியாற்றுவார். ஸ்ரீ னிவாசன் - அரியலூர் மாவட்ட எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். போலீஸ் அகாடமி கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கே. மீனா - பதவி உயர்வு பெற்று, பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி ஆக, சென்னை தலைமையகத்தில் பணியாற்றுவார். மொத்தம் 18 ஐ பி எஸ் அதிகாரிகளில், 9 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.
Next Story