தீபாவளி பண்டிகையை ஒட்டி கூட்ட நெரிசல் : டிரோன் விமானங்கள் மூலம் கண்காணிப்பு தீவிரம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் அதிகமாக கூடும் மதுரை விளக்குத்தூண் பஜாரில் டிரோன் கேமிராக்கள், மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி கூட்ட நெரிசல் : டிரோன் விமானங்கள் மூலம் கண்காணிப்பு தீவிரம்
x
தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் அதிகமாக கூடும் மதுரை விளக்குத்தூண் பஜாரில் டிரோன் கேமிராக்கள், மூலம்  காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மதுரை மாநகர காவல்துறை சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். திருடர்களை அடையாளம் காண, சாதாரண உடையில் சில போலீசார், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கு ஒலிபெருக்கிகள் மூலமாக காவல்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்