பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு
திருப்பூர் மாவட்டம் கிரிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி தனது வீட்டை செந்தில் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் கிரிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி தனது வீட்டை செந்தில் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். வெளியூருக்கு சென்ற செந்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வீட்டிற்கு மற்றோருவர் வாடகைக்காக வந்துள்ளார். அவர் வீட்டை திறந்து பார்த்த போது மணல் நிரப்பட்ட டிரம்மில் அழுகிய நிலையில் பெண் சடலம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story