பங்கு வர்த்தகத்தில் 15 லட்சம் இழப்பு : தீபாவளி சீட்டு நடத்திய தாய் மகன் தற்கொலை
சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூரில் தீபாவளி சீட்டு நடத்தி வந்த தாய் மற்றும் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது தாயார் அமலாவுடன் தீபாவளி சீட்டு நடத்தி வந்த ஜோஷ்,பணத்தை பங்கு வணிகத்தில் முதலீடு செய்திருந்ததாக கூறப்படுகிறது. அதில் 15 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. தீபாவளி நெருங்கிய நிலையில் சீட்டு போட்டிருந்த அந்த பகுதி மக்களுக்கு பணம் மற்றும் பொருட்களை திருப்பி கொடுக்க முடியாததால் விரக்தியடைந்த ஜோஷ் மற்றும் அவரது தாயார் அமலா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலைக்கு முன் ஜோஷ் எழுதிய கடிதத்தை கைப்பற்றிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story