ஆரணி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.5 கோடி மோசடி

ஆரணியில் ஏலசீட்டு நடத்தி சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த 3 பேரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ஆரணி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.5 கோடி மோசடி
x
ஆரணியில் ஏலசீட்டு நடத்தி சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த 3 பேரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம்  வேலப்பாடி ஊராட்சிக்குபட்ட சிவசக்தி நகரை சேர்ந்த மோகன், அவரது மனைவி ஷகிலா மற்றும் அய்யப்பன் ஆகியோர் ஓன்றுணைந்து மாத சீட்டு நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் நூற்றுக்கும் மேற்பட்டோர் 5 மற்றும் 10 லட்சம் ரூபாய் சீட்டில் இணைந்துள்ள நிலையில், ஒன்றரை கோடி ரூபாயை வசூல் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் 3 மாதங்களுக்கு முன்பு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். 3 பேரையும் கைது செய்து, தங்களது பணத்தை திரும்பப் பெற்றுத் தரவேண்டும் என அவர்கள் மனுவில் கோரியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்