தீபாவளியையொட்டி, சென்னையில் 6 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கம்

தீபாவளியையொட்டி, சென்னையில் 6 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியையொட்டி, சென்னையில் 6 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கம்
x
* தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக வரும் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

* அதன்படி, நெல்லை, மதுரை, திருவனந்தபுரம், பெங்களூரு, சேலம், கோவை செல்லும் பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் .

* ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் மாதவரத்தில் இருந்தும் காஞ்சிபுரம், வேலூர், ஓசூர், தருமபுரி செல்லும் பேருந்துகள், பூந்தமல்லியில் இருந்தும் புறப்படும்.

* கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்தும், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்தும் புறப்படும். 

* புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள், கே.கே.நகர் பணிமனையிலிருந்து புறப்படும். 

* நவம்பர் 3 முதல் 7ஆம் தேதி வரை, தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் வாகனங்கள் அனைத்தும், ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர். சாலை மூலமாக செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம் வழியாக செல்லுமாறும் போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்