பரவி வரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அச்சம்
ராமநாதபுர மாவட்டம் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சாக்கடைகள் சரிவர சுத்தம் செய்யாமல் ஆங்காங்கே தேங்கி கிடப்பதால் கொசுக்கள் அதிகளவில் உருவாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் பரமக்குடி நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சுகாதாரம் கேள்விக்குறியாகி மர்ம காய்ச்சல் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து காய்ச்சல் பாதிப்பை தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story