மர்ம காய்ச்சலுக்கு ஆறாம் வகுப்பு மாணவி பலி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கே.காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தனின் மகள் சவீதா அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
மர்ம காய்ச்சலுக்கு ஆறாம் வகுப்பு மாணவி பலி
x
நேற்று பள்ளிக்கு சென்ற சவீதாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி நிர்வாகம் கொடுத்த தகவலையடுத்து பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் சவீதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சவீதா உயரிழந்தார். இதனையடுத்து பரவிவரும் மர்ம காய்ச்சல் குறித்து  சுகாதாரத்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்