ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சிறப்பு பூஜை
ராமேஸ்வரத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி அக்னி தீர்த்தத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பஞ்சாப் மாநிலம் செளரா பஜார் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தசரா விழாவின் போது நடைபெற்ற ரயில் விபத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் சிவ சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்தனை செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். அதன் பிறகு அக்னி தீர்த்தத்தில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.
Next Story