ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து விவசாயிகள் போராட்டம்...

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து விவசாயிகள் போராட்டம்...
x
தஞ்சாவூர் 

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ பத்மாவதி உள்ளிட்டோர்,  பங்கேற்றனர்.  

நாகை

நாகை, கடலூர் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்து, நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

புதுக்கோட்டை

புதுக்கோட்டை திலகர் திடலில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  

சீர்காழி 

சீர்காழியில் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,  விவசாய தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்