"சபரிமலை போராட்டம் வாயிலாக இந்து உணர்வு மேலோங்கி வருகிறது" - தமிழிசை சவுந்தரராஜன்

சபரிமலை போராட்டம் வாயிலாக இந்து உணர்வு மேலோங்கி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சபரிமலை போராட்டம் வாயிலாக இந்து உணர்வு மேலோங்கி வருகிறது - தமிழிசை சவுந்தரராஜன்
x
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழக பாஜகவினர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், பாரம்பரியத்தை காக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன், சபரிமலை போராட்டம் வாயிலாக இந்து உணர்வு மேலோங்கி வருவதாக கூறியுள்ளார். தீர்ப்பு குறித்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பதே முதல் வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்