2 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை - குடும்பத் தகராறால் ஏற்பட்ட விபரீதம்

ஆண்டிப்பட்டி அருகே 2 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை - குடும்பத் தகராறால் ஏற்பட்ட விபரீதம்
x
* தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள தர்மராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜிவ். இவரது மனைவி ராம்பிரியா. 

* இவர்களுக்கு 2 வயதில் அனன்யா என்ற மகளும் ஒரு வயதில் தர்ஷனா என்ற குழந்தையும் இருந்தனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

* இந்த நிலையில் இன்று பிரச்சினை அதிகமாகவே மனம் உடைந்த ராம்பிரியா, தனது 2 குழந்தைகளின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

* இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தனது மகள் மற்றும் பேத்திகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ராம்பிரியாவின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்