தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் : 5-வது கட்ட விசாரணை தொடக்கம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த ஐந்தாவது கட்ட விசாரணை தொடங்கியது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் : 5-வது கட்ட விசாரணை தொடக்கம்
x
தூத்துக்குடியில் கடந்த மே22-ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து, ஒய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. நான்கு கட்ட விசாரணை முடிந்த நிலையில், ஐந்தாவது கட்ட விசாரணை இன்று தொடங்கியது. துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு இன்று ஆஜராகுமாறு  சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில், டிக்சன் ஆகாஷ், ராமலெட்சுமி உள்ளிட்டோர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். நான்கு நாட்கள் நடைபெறும் 5-வது கட்ட விசாரணையில் ஆஜராகுமாறு, மொத்தம் 44 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்