கோயில் கடைகள் தொடர்பான அரசாணை குளறுபடியால் கோயில் நிர்வாகிகள் குழப்பம்

தமிழக கோயில்களில் உள்ள கடைகள் தொடர்பான அரசாணையில் நிலவும் குளறுபடியால் கோயில் நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
கோயில் கடைகள் தொடர்பான அரசாணை குளறுபடியால் கோயில் நிர்வாகிகள் குழப்பம்
x
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோயிலில் உள்ள கடைகளை ஏலம் எடுப்பது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை மேற்கோள்காட்டி இந்து சமய அறநிலைத் துறை முதன்மை செயலாளர் ராமசந்திரன் கடந்த மாதம் 24 ஆம் தேதி அனைத்து மண்டல ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அறநிலையத் துறை கோவில் வளாகத்திற்கு உட்புறம் வணிக நோக்கில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து கடைகளையும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்துதல் தொடர்பாக வழங்கப்பட்ட அறிவுரை குறித்த சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த சுற்றறிக்கையில் நிலவும் பல்வேறு குளறுபடியால் அறநிலையத் துறை அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்