சென்னையில் நீதிமன்ற தடையை மீறி பறக்கும் மாஞ்சா பட்டங்கள்

சென்னையில் மாஞ்சா கயிறு தடவிய காற்றாடி பறக்க விடுவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையிலும் அது முற்றிலும் ஒழிக்கப்படவில்லையோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் சமீபத்தில் அரங்கேறியுள்ளது.
சென்னையில் நீதிமன்ற தடையை மீறி பறக்கும் மாஞ்சா பட்டங்கள்
x
சென்னையில் மாஞ்சா கயிறு தடவிய காற்றாடி பறக்க விடுவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. மாஞ்சா கயிறு தடவிய காற்றாடி பறக்கவிடுவோர் மீது  சென்னை காவல்துறையும்  கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்து படுகாயம் அடைந்துள்ளார் சென்னை கொளத்தூரை சேர்ந்த இளைஞர் லோகேஷ் குமார். 

கடந்த வியாழக்கிழமை மாலை வியாசர்பாடி அம்பேத்கார் கல்லூரி சாலையில் தனது நண்பருடன் லோகேஷ் குமார் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது திடீரென மாஞ்சா தடவிய நூல் ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து லோகேஷ் குமாரின் கழுத்தில் பட்டு அறுத்துள்ளது. இதனையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லோகேஷ் குமாருக்கு கழுத்தில் 23 தையல்கள் போடப்பட்டுள்ளது. 3 நாள் சிகிச்சை முடிந்த பின்பு வீடு திரும்பிய லோகேஷ் குமாருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கழுத்திலிருந்து ரத்த கசிவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயத்தின் அளவு கழுத்தில் மிக ஆழமாக இருப்பதால் பேச முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார் லோகேஷ் குமார்.

Next Story

மேலும் செய்திகள்