தன் உயிரை தியாகம் செய்த கல்லூரி மாணவர்

சிறுவனின் உயிரை காப்பாற்றிய போது விபரீதம்
தன் உயிரை தியாகம் செய்த கல்லூரி மாணவர்
x
சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தை சேர்ந்த ஆறுமுகத்தின்  மூத்த மகன் பாண்டிய ராஜன்.. தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த அவர், நேற்று  மெரினாவுக்கு வந்துள்ளார். அப்போது கடல் அலையில் சிக்கி போராடிய சிறுவன் ஒருவனை காப்பாற்ற,  பாண்டிய ராஜன் கடலுக்குள் இறங்கி உள்ளார்.. இருவரையும் கடல் அலை இழுத்துச் சென்ற நிலையில் மீனவர்கள் சிறுவனை காப்பாற்றி உள்ளனர் . எங்கு தேடியும் கிடைக்காத  பாண்டியராஜன்.  இன்று சடலமாக கரை ஒதுங்கி உள்ளார் 

Next Story

மேலும் செய்திகள்