மின்கம்பத்தை பிடித்து விளையாடியபோது மின்சாரம் தாக்கி சிறுமி பலி

சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
மின்கம்பத்தை பிடித்து விளையாடியபோது  மின்சாரம் தாக்கி சிறுமி பலி
x
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு சம்பா கட்டளை பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் 10 வயது மகள் சித்ரா. தனது வீட்டருகே சித்ரா விளையாடிக் கொண்டிருந்தபோது, மழை பெய்து ஓய்ந்திருக்கிறது..விளையாடிக் கொண்டே வீட்டு வாசல் அருகே  இருந்த மின் கம்பத்தை சித்ரா பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் சித்ரா தூக்கி வீசப்பட்டார்.படுகாயம் அடைந்த அந்த சிறுமி,  சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் உள்ள மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருப்பதை, பார்த்து நடவடிக்கை எடுக்காத  மின்வாரிய அதிகாரிகளுக்கு மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
பொறுப்பின்றி செயல்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்