சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை வழக்கு : சிறப்பு போலீஸ் படை அதிகாரி பணி நீக்கம் செல்லும்
சிபிஐ அதிகாரிகள் போல நடித்து பணம் கொள்ளையடித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹவில்தாரை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை பிறப்பித்த உத்தரவை,சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சிபிஐ அதிகாரிகள் போல நடித்து பணம் கொள்ளையடித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹவில்தாரை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. பரமசிவம் என்பவர் தொடர்ந்த, வழக்கின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஹுலுவாடி ஜி. ரமேஷ், கே.கல்யாணசுந்தரம் அடங்கிய அமர்வு விசாரித்தது. முடிவில், குற்ற விசாரணை நடைமுறையும், துறை ரீதியான விசாரணை நடைமுறையும் வெவ்வேறானது என கூறி பரமசிவத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Next Story