சரக்கு லாரி மீது கார் மோதி விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 8 மாத குழந்தை

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
சரக்கு லாரி மீது கார் மோதி விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 8 மாத குழந்தை
x
விழுப்புரம் அருகே சரக்கு லாரி மீது, கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டிவனம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அருண் என்பவர் தமது குடும்பத்தினருடன் சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ராமலட்சுமி, விஜயகுமார், சபரி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விஜயகுமாரின் 8 மாத குழந்தை காயம் ஏதும் இன்றி உயிர் தப்பியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்