நைட்டி அணிந்த சென்று பள்ளியில் ரூ.26.36 லட்சம் திருட்டு

கன்னியாகுமரி, நெல்லையை சேர்ந்த 2 இளைஞர்கள் கைது
நைட்டி அணிந்த சென்று பள்ளியில் ரூ.26.36 லட்சம் திருட்டு
x
கரூர் மாவட்டம் வெள்ளியணை காக்காவாடியில் உள்ள பள்ளி ஒன்றில், கடந்த 3 ஆம் தேதி 26 லட்சத்து 36 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  பள்ளி முதல்வர் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். பள்ளியின் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் 2 பேர் நைட்டி உடையுடன் அலுவலக பூட்டை உடைத்து பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது. இந்நிலையில், நேற்று சுக்காலியூர் சோதனை சாவடி அருகே குமரி மாவட்டம் கொல்லம்விளையை சேர்ந்த வினோத் மற்றும் நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்த  பிரபு ஆகியோரை பிடித்து விசாரித்ததில் பள்ளியில் பணம் கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்த 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்