பெற்றடுத்த குழந்தையை சில மணி நேரத்தில் கொன்ற தாய்

சென்னை வேளச்சேரி கன்னிகாபுரத்தில் சாலையோரம் இருந்த குப்பை தொட்டியில் கடந்த மாதம் 17 ஆம் தேதி பிறந்து சில மணி நேரம் ஆன பெண் குழந்தை பிணமாக கிடந்தது.
பெற்றடுத்த குழந்தையை சில மணி நேரத்தில் கொன்ற தாய்
x
சென்னை வேளச்சேரி கன்னிகாபுரத்தில் சாலையோரம் இருந்த குப்பை தொட்டியில் கடந்த மாதம் 17 ஆம் தேதி பிறந்து  சில மணி நேரம் ஆன பெண் குழந்தை பிணமாக கிடந்தது. போலீசார் விசாரணை மேற்கொண்டதில், குழந்தையின் தாய் வசந்தி, அவரது தாய் விஜயா மற்றும் காதலன் ஜெபராஜ் ஆகிய 3 பேரும் குழந்தையை கொன்று குப்பை தொட்டிக்குள் வீசியது தெரிய வந்துள்ளது. ஜெபராஜ் உடன் ஏற்பட்ட நெருங்கிய பழக்கத்தால், தாம் கர்ப்பமானதாகவும், வெளியே தெரிந்தால் அவமானம் என கருதி, தாய் மற்றும் காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்றதாக, வசந்தி தெரிவித்துள்ளார். இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்