மதுரையில் முன்விரோதம் காரணமாக ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை : வெளியான பரபரப்பு காட்சிகள்

மதுரையில் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் முன்விரோதம் காரணமாக ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை : வெளியான பரபரப்பு காட்சிகள்
x
மதுரையில் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் இரவு வீடு திரும்பும்போது மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டி கொல்லப்பட்டார்.  ஜெயக்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். ஆனால் அவரது உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பல்வேறு வழிப்பறி வழக்குகள் ஜெய்குமார் மீது நிலுவையில் உள்ள நிலையில், முன்விரோத காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஜெயக்குமாரை வெட்டிய காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்