தோகை விரித்து ஆடிய ஆண் மயில்...
ஈரோட்டில் உள்ள விவசாய தோட்டத்தில் ஆண் மயில் ஒன்று தோகையை விரித்து நடனம் ஆடிய காட்சியை மக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.
ஈரோடு சின்னியம் பாளையம் - பாரதி நகரில் உள்ள முத்துமணி என்ற விவசாய பெண்மணியின் தோட்டத்தில் 30 நிமிடங்களுக்கு மேலாக ஆண் மயில் ஒன்று, ஆனந்த நடனம் ஆடியது. ஆண் மயிலின் நடனத்தை, ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
Next Story