நடுரோட்டில் கல்லூரி மாணவன் வெட்டி கொலை : 8 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
மதுரையில் நடுரோட்டில் கல்லூரி மாணவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில், நடுரோட்டில் கல்லூரி மாணவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகனின் மகன் பிரவீன் குமார், மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், அனுப்பானடி பகுதியில், பிரவீன், தனது சகோதருடன்
நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அதே பகுதியை சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அவரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story