தாமிரபரணி மஹா புஷ்கரவிழா : தைப்பூச படித்துறையில் நதிக்கு சிறப்பு அபிஷேகம்
தாமிரபரணி மஹா புஷ்கர விழாவின் 8ஆம் நாளான நேற்று தைப்பூச மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்து தாமிரபரணி நதிக்கு 16 வகை அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கண்ணாடி வளையல், குங்குமம், மஞ்சள், பட்டுத்துணி ஆகிய பொருட்கள் தாமிரபரணி நதிக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தாமிரபரணி நதிக்கு 7 அர்ச்சகர்கள் கொண்டு மஹா ஆரத்தி நடைபெற்றது. மஹா ஆர்த்தியின் போது பக்தர்களும் ஒரு சேர தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
Next Story