போதை மாத்திரை கேட்டு மருந்தகத்தில் தகராறு - கைதான 5 பேரும் சிறையில் அடை​ப்பு

போதை மாத்திரை கேட்டு மருந்தகத்தில் பொருட்களை உடைத்து தகராறு செய்த 5 பேரையும் கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போதை மாத்திரை கேட்டு மருந்தகத்தில் தகராறு - கைதான 5 பேரும் சிறையில் அடை​ப்பு
x
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் போதை மாத்திரை கேட்டு மருந்தகத்தில் பொருட்களை உடைத்து தகராறு செய்த 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சரவணன் என்பவருக்கு சொந்தமான மருந்தகத்தில் இளைஞர்கள் சிலர் குடிபோதையில் போதை மாத்திரை கேட்டு  தகராறு செய்துள்ளனர். மருந்து சீட்டு இல்லாமல் மருந்து தர முடியாது என்று உரிமையாளர் சரவணன் கூற பாறாங்கற்கள் பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கடையை அடித்து நொறுக்கினர். தகராறில் ஈடுபட்ட 2 பேரை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து தப்பி ஓடிய 3 பேரையும் தாம்பரம் படப்பை சாலையில் போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேர் மீதும் கொலை முயற்சி பொருட்கள் சூறை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்