அம்மன் கோவிலை பூட்டி சீல் வைத்த வட்டாட்சியர்..!

மதுராந்தகம் அருகே இரண்டு பிரிவினருக்கு ஏற்பட்ட பிரச்சனையால் அம்மன் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அம்மன் கோவிலை பூட்டி சீல் வைத்த வட்டாட்சியர்..!
x
பூங்குனம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பொன்னி அம்மன் கோவிலில் மண்டல பூஜைக்காக கூடிய 2 பிரிவினருக்கு இடையே வாக்குவாதம் உருவாகி பதட்டமான சூழல் உண்டானது. தகவலறிந்து அங்கு வந்த வட்டாட்சியர், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் அரசு ஆகியோர் 2 தரப்பினரிடையே சமரசம் செய்ய முயன்றனர். பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் உடன்படாததால் அம்மன் கோயிலை பூட்டி சீல் வைத்த வட்டாட்சியர்,  மறு உத்தரவு வரும் வரை யாரும் கோவிலை திறக்கக் கூடாது என  உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்