குழந்தைகளால் கொண்டாடப்பட்ட சமத்துவ நவராத்திரி விழா
சேலத்தில் குகை பகுதியில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் அனைத்து மத கடவுளின் பொம்மைகளை வைத்து குழந்தைகளால் சமத்துவ நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
மீனாட்சி அம்மனை வழிபடும் காட்சிகள், இயேசுவின் பிறப்பு குறித்த காட்சிகள், இஸ்லாமியத்தில் கடவுளுக்கு உருவம் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக தர்கா காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. குழந்தைகளுக்கு விதவிதமான உணவுகள் தயார் செய்யப்பட்டு ஒரே இடத்தில் பரிமாறப்பட்டது. ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் விதமாக இவ்விழா நடைபெற்றது.
Next Story