"தமிழகம் முழுவதும் நாளை 15 இடங்களில் மறியல்" : தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம்

பணி வரன்முறை, ஓய்வூதியம் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக ரேசன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்
தமிழகம் முழுவதும் நாளை 15 இடங்களில் மறியல் : தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம்
x
விழுப்புரத்தில் இரண்டாவது நாளாக, ரேசன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். அப்போது, பேசிய அவர், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் தமிழகம் முழுவதும் நாளை 15 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்