அண்ணா வளர்ப்பு மகனுக்கு வழங்கப்பட்ட அரசு குத்தகை நிலம் - அபகரிக்க முயற்சி என மாவட்ட ஆட்சியரிடம் தி.மு.க.வினர் மனு
மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளத்திற்கு கடந்த 1995 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் உள்ள 7 ஏக்கர் நிலம் 20 ஆண்டுகள் குத்தகைக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டது.
மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளத்திற்கு கடந்த 1995 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் உள்ள 7 ஏக்கர் நிலம் 20 ஆண்டுகள் குத்தகைக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டது. பரிமளம் இறந்துவிட்ட நிலையில் அந்த நிலத்தை அவரது குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் குத்தகை காலம் முடிவடைந்ததால் நிலத்தை அபகரிக்க முயற்சி நடப்பதாகவும், அதனை தடுத்து நிலத்தின் குத்தகையை மீண்டும் பரிமளம் குடும்ப வாரிசுகளுக்கு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் திமுக நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
Next Story