பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது

திருவாரூர் அருகே இரு அரசு பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று இளைஞர்கள், போஸ்கோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது
x
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் அதே பகுதியை சோ்ந்த இரு மாணவிகள், கடந்த 10 ஆம் தேதி முதல் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடி கிடைக்காததால், குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குடவாசல் பகுதியை சோ்ந்த கௌதம், மயிலாடுதுறையை சோ்ந்த சுந்தரமூர்த்தி ஆகியோர் இரு மாணவிகளை காதலிப்பதாக கூறி அழைத்து சென்றது தெரிய வந்தது.  இதனையடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை மீட்டு உடனிருந்த மூன்று இளைஞர்களையும், காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் மாணவிகளை காதலிப்பதாக கூறி அவர்களை அழைத்து சென்று, வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரும், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு போஸ்கோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட மாணவிகள் அரசு காப்பகத்திற்கு அனுப்பப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்