10 தியேட்டர்களுக்கு புதிய படம் தரப்படாது - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்ட 10 திரையரங்குகளில் 17ந் தேதி முதல் புதிய படங்கள் திரையிடப்படாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய படங்களை திருட்டுத்தனமாக படம்பிடித்து ஆதாரங்களுடன் சிக்கி உள்ள பெங்களூரு, மங்களூரு, கிருஷ்ணகிரி, கரூர், மயிலாடுதுறை, விருத்தாசலம் ஆகிய இடங்களில் உள்ள 10 திரையரங்குகள் மீது சட்ட ரீதியாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Next Story