ஆந்திர பேருந்துகள் இனி கோயம்பேட்டில் இருந்து புறப்படாது..!

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும், வருகிற 19ம் தேதி முதல் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.
ஆந்திர பேருந்துகள் இனி கோயம்பேட்டில் இருந்து புறப்படாது..!
x
ஆந்திர அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, நெல்லூர், கடப்பா, காளஹஸ்தி, திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்கு தினமும் 143 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது, சென்னை மாதவரத்தில்  புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து ஆந்திராவுக்கு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் 19ஆம் தேதி முதல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் ஆந்திர மாநில பேருந்துகள் அனைத்தும், மாதவரத்தில் இருந்து இயக்கப்படும் என ஆந்திர அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்