ஆதரவின்றி இருந்த மூதாட்டியை வெளியே தூக்கி வீசிய அவலம்

காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வுக்கு வருவதால் அங்கே ஆதரவின்றி இருந்த மூதாட்டியை மருத்துவமனை ஊழியர்கள் வெளியே தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆதரவின்றி இருந்த மூதாட்டியை வெளியே தூக்கி வீசிய அவலம்
x
* சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சரஸ்வதி என்ற மூதாட்டி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். திருமணமாகாத அவர் யாருடைய ஆதரவு இன்றி தனியாக இருந்த அவருக்கு கால்கள் நடக்க முடியாமல் போனதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்த வந்தார். 

* இதன் காரணமாக அங்கிருந்த மூதாட்டியை அப்புறப்படுத்தும் நோக்கில் மருத்துவமனை ஊழியர்கள் அவரை வெளியே கொண்டு போட்டனர். தனக்கு சிகிச்சை தேவைப்படும் என்பதால் மீண்டும் தன்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அந்த மூதாட்டி கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்த காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. 

Next Story

மேலும் செய்திகள்