பள்ளி சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை : கடத்தலா? தற்செயலா? போலீசார் தீவிர விசாரணை

பள்ளிக்கு சென்று வீடு திரும்பாத மாணவன் முன்பின் தெரியாத பெண்ணுடன் செல்வது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளதால், மாணவன் கடத்தப்பட்டனா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பள்ளி சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை : கடத்தலா? தற்செயலா? போலீசார் தீவிர விசாரணை
x
திருவாரூர் புதுதெரு பகுதியை சேர்ந்த சசிக்குமாரின் மகன் ஹரிவசந்த், தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். மாலையில் மகனை வீட்டுக்கு அழைத்து வர தாய் சாந்தி பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் பள்ளி வளாகம் முழுவதும் தேடியும் ஹரிவசந்த் காணாததால், காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்த போது, சுமார் 40 வயது மதிக்கதக்க முன்பின் தெரியாத பெண்ணுடன் ஹரிவசந்த் செல்வது பதிவாகியிருந்தது.

இந்நிலையில் கடத்தல் முயற்சியில் அந்த பெண் ஹரிவசந்தை அழைத்து செல்கிறாரா, அல்லது வேறேதும் காரணங்களுக்காக ஹரிவசந்த் வீட்டை விட்டு சென்றுவிட்டானா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்