சிலைக்கடத்தல் வழக்கு : தேவைப்பட்டால் ஒரு மணி நேரத்தில் உத்தரவு, இல்லாவிட்டால் 3 மாதமா?

மத்திய அரசுக்கு ஆவணங்களை அனுப்பாமல் சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பித்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சிலைக்கடத்தல் வழக்கு : தேவைப்பட்டால் ஒரு மணி நேரத்தில் உத்தரவு, இல்லாவிட்டால் 3 மாதமா?
x
* சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு, சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார். 

* எந்த ஆவணங்களையும் மத்திய அரசிற்கு அனுப்பாமல் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அரசுக்கு அவசியமென்றால் 1 மணி நேரத்தில் உத்தரவு பிறப்பிப்பதாகவும், இல்லையென்றால் உத்தரவு பிறப்பிக்க 3 மாதங்கள் ஆவதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை இன்றே மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கு விசாரணை அக்டோபர் 25க்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்