திருமணமாகி இரண்டு ஆண்டுகளான பெண் தனது கல்லூரி காதலனுடன் ஓட்டம்

திருமணமாகி இரண்டு ஆண்டுகளான பெண் ஒருவர் தனது கல்லூரி காதலனுடன் சென்றது பரபரபப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமணமாகி இரண்டு ஆண்டுகளான பெண் தனது கல்லூரி காதலனுடன் ஓட்டம்
x
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மங்களேஸ்வரி நகரைச் சேர்ந்த நளாயினி என்பவருக்கும் சின்ன ஏர்வாடியை சேர்ந்த ஆனந்த பிரகாசுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணமான 21 ஆவது நாளில், சவுதி அரேபியாவுக்கு ஆனந்த பிரகாஷ் சென்று விட்டார். தற்போது, தனது மனைவியை சவுதிக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை ஆனந்த பிரகாஷ் செய்து வந்துள்ளார். விமான டிக்கெட்டை அவர் அனுப்பிய நிலையில் கடந்த 7ம் தேதியில் இருந்து நளாயினி மாயமாகியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் விசாரித்தபோது நளாயினி, தனது காதலன் வெண்ணிலவனுடன் இருப்பது தெரியவந்தது. இருவரையும் அழைத்து வந்து விசாரித்தபோது கல்லூரியில் படித்தபோது இருவரும் காதலித்ததாகவும் பெற்றோருக்கு தெரிந்ததால் அவசரமாக திருமணம் செய்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். காதலருடன் செல்லவும் விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, உதவி ஆய்வாளர் சரவணன் விரும்பியவருடன் வாழ நளாயினிக்கு உரிமை உண்டு என கூறியதால் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் ஆய்வாளர் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் ஏர்வாடி காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்